வியாழன், 4 டிசம்பர், 2008

எங்கோ கேட்டவை

முட்டைய 
        உள்ள இருந்து உடைச்ச ஜனனம்!!! 
         வெளிய இருந்து உடைச்ச மரணம்!!!

                                - டிவி நிகழ்ச்சியில் கேட்டது 


  கஷ்டத்திலோ இன்பதிலோ இருக்குபோது
   நினைக்க வேண்டியது 
  
      இந்த நிலையும் கடந்து செல்லும்!!!
                                                      
   - நடிகர் சிவகுமார் 


  பாசமோ கோபமோ 

       அலை மாதிரி இருந்ததான் நல்லா இருக்கும்
       சுனாமி மாதிரி இருந்தா ரெம்ப கஷ்டம்தான்!!! 

                                                    - சுயமா யோசிச்சது 


   இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான், 
   தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான் 
   பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்றுதான்
   வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான்

                                   -கண்ணதாசன்

திங்கள், 1 டிசம்பர், 2008

தமிழனுக்கும் தமிழ்நாடுக்கும் மட்டுமே சொந்தம்

வீரம், முருகன், அய்யனார்,கோபுரம், சக்கரை பொங்கல், இட்லி... இவை போல மேலும் பல உள்ளன தமிழனுக்கு....

இவை மற்ற இடத்தில் இருந்தாலும் அவை தமிழையும் தமிழ்நாட்டையும் நினைவு கூறுபவையாக மட்டுமே இருக்கும்







என்னதான் நாகரிக உலகத்தில் இருந்தாலும்,வெளிமாநிலதிலோ, வெளிநாட்டிலோ,  இருந்தாலும் அவன் அடி மனதில் ஒரு தமிழன் உணர்வு கண்டிப்பாக இருக்கும். அவை இவைகளை பார்க்கும் போது கண்டிப்பாக மனதிலும் கண்களிலும் வெளிப்படும். 

இவை போல தமிழ் சொந்தம் உங்களுக்கு வேறு ஏதும் தெரிந்தால் சொல்லவும் 


Blog Widget by LinkWithin