நல்லவனுக்கு நல்லவன் , அண்ணாமலை , படையப்பா இந்த மூன்று படங்களின் திரைகதை ஒற்றுமைகள்.
இந்த மூன்று படங்களிலும் ரஜினி முதலில் சாதரண மனிதராக இருப்பார்.ரஜினியின் சொந்தம் அல்லது நண்பர் தப்பு செய்வார்கள் அதை ரஜினி கண்டிபார்.
பின்னர் அவர்கள் எதிரியுடன் இணைந்து ரஜினியை பழி வாங்குவார்கள் அதனால் பாதிக்கப்படுவார் பின்னர் கடுமையாக உழைத்து மிக பெரிய பணக்காராக ஆவர். அதே நேரத்தில் காதல் செய்து கல்யாணம் பண்ணி பெண் குழந்தை பிறந்திருக்கும்.
அதை பாசமுடன் வளர்த்திருபார். ஆனால் ரஜினி மகள் எதிரியின் மகனை காதல் செய்வாள். ரஜினி அதை கண்டிபார். அதனால் ரஜினி மகள் ரஜினியே கேவல படுத்துவாள். அதே நேரத்தில் எதிரியால் சொந்தம் அல்லது நண்பர் பாதிகபடுவார்.
அதனால் ரஜினி எதிரியுடன் சண்டை போட்டு காப்பாத்துவார். கடைசில் எல்லோரும் ஒன்று சேர்வார்கள்.
மூன்றிலும் ரஜினி இளமை, முதுமை, ஆகிய வேடங்களில் அருமையாக நடித்துருப்பார். இளமை வயதில் வேகமான ரஜினியாகவும் ,முதுமை வயதில் பொறுப்பான அப்பாவாக வலம்வருவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக