திங்கள், 13 அக்டோபர், 2008

தமிழ் to ஹிந்தி பாகம் - 3

முந்தின பதிப்பு இங்க (தமிழ் to ஹிந்தி பாகம் - 2)


என்னடா இவன் ரெம்ப பயந்தவனா இருக்கான்னு நெனைக்க வேண்டாம். எல்லோருக்கும் முதல் தடவை புது உலகத்துக்கு போகும் பொது இருக்குறதுதான்.

அந்த பயத்தோட மொபைல் உள்ள ஒரு ஒரு நம்பரா பார்த்துட்டு இருந்தேன். அப்பதான் நாபகம் வந்துச்சு என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் ஒருவன் மும்பையில் வேலை பாக்குறேன்னு சொன்னது. ஆனா அவன் நம்பர் என்ட இல்ல. அதனால என்கூட பள்ளியில படிச்ச பிரண்சுக்கு போன் போட்டு எப்டியோ நம்பர் வாங்கி அவனுக்கு கால் பண்ணேன். நான் முன்ஜென்மத்துல செஞ்ச புண்ணியம் அவன் நான் இறங்க வேண்டிய DADAR லதான் தங்கி இருகேன்னு சொன்னான். அவன்ட நடந்தது , நடக்குறது, நடக்கபோவது எல்லாம் சொல்லி வண்டி பெட்டி நம்பர் சொல்லி 4 மணிக்கு ஸ்டேஷன் வர சொல்லிடு கால கட் பண்ணிட்டு யப்பாடினு உட்கார்ந்தேன்.


மொபைல்ல காலை 2:30   அலாரம் வச்சிட்டு படுத்து துங்க ஆரம்பிச்சேன். 2 மணிக்கு நான் எந்துருச்சு அலாரத்த எழுப்பி அமத்திட்டு ஜன்னல பார்த்துடே இருந்தேன். திடிர்னு ட்ரைன் குகை குள்ள எல்லாம் போய்ட்டு இருந்தது. இருட்டா இருந்ததால சரியா தெரியல. லேசா குளுரவும் செஞ்சது. மனசுல லேசா சந்தோசமா வேற இருந்துச்சு. B.E முடிச்சபோ நம்மக்கு Rs3000 சம்பளத்துல சாப்ட்வேர்ல வேலை கிடைக்குமானு இருந்த என்னக்கு Rs10000 ல Offer.  சந்தோசம் இருக்கத்தான செய்யும். அப்டியே சென்னைல வேலை தேடி கம்பெனி கம்பெனியா interview அட்டென்ட் பண்ணது. மொபைல் சிம் கார்டு விக்க வேலை கிடைச்சதும் , அதுக்கு சந்தோஷ பட்டது, அத எங்க அண்ணன்ட சொல்லி திட்டு வாங்குனது. பணம் கட்ட சொல்லி ஒருத்தன் வேலதரனு சொன்னது நெனச்சி நானே சிரிச்சுகிட்டேன் நம்மக்கும் லைப் செட் ஆகபோதுனு சந்தோசத்துல.  

மும்பை ஸ்டார்ட் ஆக பெட்டி பேக் எல்லாம் எடுத்து வச்சி வாசல்ல வந்து ரவிக்கு (அதாங்க ஸ்கூல் நண்பன்) போன் போட்டேன் அவனும் ஸ்டேஷன் வந்துட்டேனு சொன்னான். என்னைய அறியாம வாய்ல சின்ன சிரிப்பு.  
Dadar ஸ்டேஷனும் வந்துருச்சு. அவனும் கரெக்ட்டா என் கோச் நேரா வந்து நின்னான். ரெம்ப நாள் கழிச்சு பார்த்த சந்தோசத்துல என்னடா மச்சான் எப்டி இருக்குறனு நலம் விசாரிச்சுட்டு இருந்தேன். திடிர்னு யரோ காது பக்கத்துல என்னமோ கத்தி 
பெட்டில கைய வச்சி இழுத்த மாதிரி இருந்துச்சு திரும்புனா சிகப்பு சட்டைல பெட்டி தூக்குரவரு யம்மாடி பயந்த மாதிரியே வந்துடங்கய ( அந்த ஊர்லயும் அதே சிகப்பு சட்டை) நல்ல வேல ரவிக்கு ஹிந்தி கொஞ்சம் தெரிஞ்சுருந்தது. என்னமோ சொன்னான்.  அதுக்கு அவரு எதோ சொல்லிட்டு போய்ட்டாரு. அப்டியே மெதுவ நடந்தோம் அவன் வீட்ட பத்தி நான் விசாரிக்க பதிலுக்கு அவன் விசாரிக்க ஸ்டேஷன் வாசல பார்த்து. காலை 4 மணி போலவே இல்ல அவ்ளோ 
கூட்டம் அந்த ஸ்டேஷன் . நான் அவன்ட கேட்டேன் என்னடா இவ்ளோ கூட்டம்னு அதுக்கு அவன் சொன்னான் இதுஎன்ன மச்சி கூட்டம் காலையில 8 மணிக்கு இருக்கும் பாரு கூட்டம் அதுக்கு பேர்தான் கூட்டம்னு சொன்னான்.
அப்டியே dadar வாசல்ல வந்து நின்னோம். அந்த நேரத்துக்கு அத்தன taxi அங்க நின்னுச்சு. அதுல ஒன்னுல எதோ இடத்து பேர சொல்லி கேட்டான் அப்புறம் வண்டில ஏறி உட்கந்தோம்  அப்பதான் அங்க நான் இதுவரைக்கும் பாக்காத ஒரு அதிசயம் நடந்தது!!!!!!!     



தொடரும்..................... 


கருத்துகள் இல்லை:

Blog Widget by LinkWithin